Wednesday, September 14, 2011

கால அதிர்வு

பள்ளிக்கு செல்லும் அக்காவை பார்த்துவிட்டு

' இன்னைக்கே என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போ '

என அடம்பிடித்தது குழந்தை

'நாளைக்கு போகலாம்'

சமாதானம் சொன்னாள் அம்மா .

'அப்படீனா என்னை இன்னைக்கே நாளைக்கு கூட்டிட்டு போ'

என்றது குழந்தை

திடுக்கிட்டது காலம்...


......ப . உமா மகேஸ்வரி

No comments:

Post a Comment