Tuesday, October 18, 2011

சமயங்களில் என்னையே மறந்து விடுகிறது ...
உன்னையே நினைக்கும் என் மனம்...

Sunday, September 18, 2011

உயிர் பிரியும் வலி ...


தெரிந்து செய்தாயோ , தெரியாமல் செய்தாயோ கண்ணே
இதயம் நொறுங்கி சிதறி போகும் வலி
கண்ணீரை தாண்டிய சோகம் என் நெஞ்சடைக்க
வாழவும் விருப்பம் இன்றி தவித்து போகிறேன்
காதலை மறுத்திருந்தால் கூட வலி தாங்கியிருப்பேன்
அந்த ஒரு வார்த்தையில் நீ கொன்றது காதலை மட்டுமல்ல
அது வியாபித்திருந்த இதயத்தோடு என்னையும் தான்

உன்னை தவிர வேறொன்றும் தெரியாத எனக்கு
நீ கொடுத்த இந்த வலி கொடிதினும் கொடிது

எனினும் , அந்த வலியையும் நெஞ்சினுள் அடக்கி ,
என் கண்ணீரை நீ காணமல் மறைத்து , புன்சிரிப்பு ஒன்றை
வலிந்து முகத்தில் கொணர்ந்து கேட்கிறேன்....

" ஒரு நொடி கூடவா காதல் வரவில்லை என் மீது உனக்கு...?"

இந்த என் கேள்விக்கு , நீ ஆமென்றால்
எங்கோ பொய் வாழ்ந்து கொள்வேன், உன் நினைவுகளோடு
நீ இல்லை என்றால் , கடவுளிடம் கேட்பேன்...
"காதலிக்க தகுதி இல்லாத எனக்கெல்லாம் ,
தேவையா இந்த உயிர் என்று ...?"

Wednesday, September 14, 2011

கால அதிர்வு

பள்ளிக்கு செல்லும் அக்காவை பார்த்துவிட்டு

' இன்னைக்கே என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போ '

என அடம்பிடித்தது குழந்தை

'நாளைக்கு போகலாம்'

சமாதானம் சொன்னாள் அம்மா .

'அப்படீனா என்னை இன்னைக்கே நாளைக்கு கூட்டிட்டு போ'

என்றது குழந்தை

திடுக்கிட்டது காலம்...


......ப . உமா மகேஸ்வரி

Monday, August 15, 2011

அண்ணா ...

உயிரின் நாடி ஒடுங்கி , ரத்தம் உறைந்து, இதயம் தன் துடிதுடிப்பை அடக்கிய அந்த நொடி
கூடவே இலவசமாக கண்கள் இருண்டு , காதடைத்தது, என் காலம் உறைந்து ...நடைபிணமான அந்த ஓர் நொடி
என் காதல் பூ சருகாகி என் கால்களில் விழுந்து , என் கண்ணீர் அதற்கு இறுதி அஞ்சலி செலுத்தி அடங்கிய அடுத்த நொடி
என் உயிரின் ஒவ்வோர் இழையிலும் இணைந்த உனக்கான என் காதல் , வலுக்கட்டாயமாக உருவி எடுக்கப்பட்டபோது
கண்ணீரை தவிர எதையும் பதில் தர முடியாமல் ...எனக்குள் நானே உடைந்த அந்த நொடி...
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை அடையாளம் தெரியாமல், "ஆன்டி" என்று அழைக்கும் தன் குழந்தையை கண்டு தனக்குள் குமுறி அழும்
ஒரு தாயின் வேதனையை பதிவு செய்த ஒரு நொடியை தந்தாய்
என் உயிரே , நீ என்னை உன் சகோதரனாக அழைத்த பொது

Wednesday, January 26, 2011

உனக்கான என் காதல்

காதல் மாதமான பெப்ரவரி 2007 ல் ஒரு அழகான மாலை, பேருந்துக்காக காத்திருக்கின்றான் அவன், எந்த ஒரு விசேஷ தன்மையும் இல்லாத அவன் முகம், ஊரில் உள்ள மற்ற 99 சதவிகித ஆண்களில் போல ஒருவன், எவள் ஒருத்தியும் நின்று காண எந்த ஒரு காரணமும் இல்லை அவனிடம், அதை பற்றி எப்போதும் அலட்டி கொண்டதில்லை அவன், காதலை பற்றி அறியும் எந்த ஒரு ஆர்வமும் காட்டியதில்லை இந்த நிமிடம் வரைக்கும்,. ஒவ்வொரு நாளையும் எப்படி கழிப்பது என்பது தான் அவனுடைய தற்போதைய கவலை, இதில் காதலை பற்றி அக்கறை பட அவனுக்கேது நேரம். நான்கு நண்பர்கள் , ஒரு சினிமா , எப்போதாவது ஒரு கம்ப்யூட்டர் கேம் இது போதும் அவனுக்கு வாழ்கையை ஓட்ட. அன்று காலை விடிந்தததிலும் எந்த ஒரு வித்தியாசத்தையும் காணவில்லை அவன், ஆனால் விதி அவனுக்கு அன்றைய தினத்தில் ஒரு மிக பெரிய மாற்றத்தை மறைத்து வைத்திருந்தது, அவள் ரூபத்தில் , அவள் ஒரு அழகிய தேவதை , எந்த ஒரு ஆடவனும் சில நிமிடம் கண் கொட்டாமல் பார்க்கும் அத்தனை தகுதியும் இருந்தது அவளிடம், விவரிக்க முடியாத அழகான கண்கள், குழந்தைத்தனம் மாறாத அழகிய சிரிப்பு , தேவதையை நினைப்பூட்டும் அவளுடைய முகம், அவளும் அந்த பேருந்தில் ஏற வேண்டும் .......இந்த கதை தொடரும்
இந்த கதையில் வரும் அவன் : நான் அவள் : நீ ...

Saturday, January 15, 2011

கடிதம்


ஒளி குறைந்த முன்னிரவு பொழுதொன்றில்
கண்டெடுக்க நேர்ந்தது அஞ்சல் செய்யப்படாத
என் பழைய கடிதமொன்றை ...

எந்த சுவாரஸ்யமும் இல்லை
அதை இப்போது வாசிப்பதில்
அது என் சொல்லபடாத காதலாய் சுமந்திருக்கிறது
என்பதை தவிர

மீண்டும் அதை
தொலைக்க முடியவில்லை என்னால்
முகம் தெரியாதவர்களால் வாசிக்கப்பட்டு
விமர்சிக்கப்படும் என்பதால்.

அழிக்கவும் மனதில்லை அதனை
என் சொல்லாத காதலின் ஒரே சாட்சியாக
இருக்கிறாது என்பதால்

இறுதியில் அதை
நானே இருத்திக்கொள்வதென முடிவானது
அதிகபட்சமாய் எந்த நம்பிக்கையையும்
என்னில் அது உண்டு பன்னவிடினும்
குறைந்தபட்சமாய் இது போன்றதொரு
அஞ்சல் செய்யபடாத கடிதம்
அவளிடமும் இருக்க கூடும் இன்னும்
என்ற நம்பிக்கையை உண்டுப்பண்ணியதற்கு ஆகவது

--- பெ. பார்த்திபன்

Sunday, November 21, 2010

this beautiful poems are written by someone else in vigadan..love it

குழந்தை

வெள்ளி கிழமைகளில் வீடு திரும்பும் குழந்தைகள் அம்மாக்களின் இடுப்பை கட்டி கொள்ளுகிறார்கள்
கழுத்தை வளைத்து கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்
கண்களை மூட சொல்லி ஐந்து விரல்களையும் விரிக்கிறார்கள்
பிறகு ஒவ்வொன்றாக மடித்து கண்களை திறக்க சொல்கிறார்கள்
இரண்டு விரல்களை மட்டும் உயர்த்தி இடதும் வலதுமாக அசைத்து

'டூ டேஸ் லீவ்'
என கூறும் குழந்தைகளின் குதூகலத்தை
அம்மாக்கள் மட்டுமே அறிகிறார்கள் !..
-paapu


சின்ன மீனை காட்டி
'இது நான் 'எனவும்
பெரிய மீனை காட்டி
'அக்கா' எனவும்
சொல்லிய குழந்தை
அடுத்த மீன் கிடைக்காதலால்
கடலை காட்டி
'இதுதான் நீ ' என்றாள்
அம்மாவிடம்
- naavish senthilkumar

அகன்று விரித்த
கால்களின் நடுவே வைத்து
தட்டில் இருக்கும் சோற்றை விட
தரையில் அதிகம் சிந்தியபடி
சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தையிடம்
"மாமாவுக்கு பசிக்குது கொஞ்சம் குடுங்க செல்லம் " என்று கை நீட்டினேன்
பிஞ்சு விரல்களால் ஒற்றை பருக்கையை எடுத்து
என் உள்ளங்கையில் வைத்தது .
அதை உண்டதும் என் வாழ்நாள் முழுவதுக்குமான
பசி தீர்ந்தது.
-kattalai jeya