" ஏன் துடிக்கிறாய்? " என்று இதயத்தை யாரும் காரணம் கேட்பதில்லை நீயும் கேட்காதே என்னிடம் " ஏன் என்னை காதலிக்கிறாய் ? " என்று சொல்ல தெரியாது எனக்கு, காதலிக்க மட்டும்தான் தெரியும் ......
உன்னை உனக்கு தெரியாமல் பார்க்கும் போதே இதயம் நின்றுவிடும் எனக்கு .... நேருக்கு நேர் பார்த்தால்......? நினைக்கவே பயமாய் இருக்கிறது..!! ஆனாலும் இவ்வளவு அழகாகவா இருப்பாய்..?
இந்த வலைப்பூ என் காதல் தேவதைக்கு சமர்ப்பணம்...
இதில் நான் எழுதும் ஏதேனும் ஒரு வார்த்தை அவள் மனதை தொடுமானால் ,
இந்த வலைப்பூவை நான் எழுதியதன் நோக்கம் நிறைவேறியது ...
இதிலுள்ள ஒவ்வோர் எழுத்தும் என் தேவதையை , அவள் அழகை வர்ணிக்க முயலும்...
அவளோடான என் காதலை விவரிக்கும்...